Sunday, August 02, 2020

வானப்ரஸ்தம்

வானப்ரஸ்தம்

பொதுவாக நம் ஹிந்து வழக்குப்படி வாழ்க்கையை நான்கு பாகங்களாக பிரித்து பார்க்கிறோம்.  முதலாவதாக ப்ரஹ்மசர்யம்.  நம் இளமை பருவங்களில் அநேகமான நேரங்களை கல்வி கற்பது, தன்னொழுக்கம்,  குரு பக்தி இப்படி செல்கிறது.  பெரும்பாலும் நவீன கல்வி வழக்கிலும் இதைத்தான் செய்கிறோம்.  காலத்திற்கு ஏற்ப நம் பழக்க வழக்கங்கள் மாறி இருந்தாலும் இளமையில் கல் என்பது இன்றும் பொருந்துகிறது.

ப்ரஹ்மசர்யத்தை தொடர்ந்து க்ரிஹஸ்தாச்ரமம். இந்த முறைப்படி பொருள் ஈட்டுதல், குடும்பத்தின் மேம்பாடு, குழந்தைகளின் கல்வி, சமுதாய பொறுப்புடன் வாழ்க்கை முறை இப்படி இருக்கிறது.  தர்மம், அர்த்த, காம மற்றும் மோக்ஷத்திற்கான வழியை நோக்கி செல்வது முக்கியமாகிறது.  இதை இன்றும் ஆண் பெண் என்றில்லாமல் எல்லோரும் பெரிதும் கடைபிடித்து வருகிறார்கள்.

இதை தொடர்ந்து வானப்ரஸ்தம். இந்த வானப்ரஸ்த நிலையில் நம்மை அடுத்த கட்டங்களுக்கு தயார் செய்து கொள்ளும் முக்கியமான காலமாகிறது.  இந்த நிலையில் அர்த்த, காமங்களை தொலைந்து மோக்ஷத்தை நோக்கி அதிக நேரம் செலவிடுவது முக்கியமாகிறது.  சுமார் ஐம்பதில் இருந்து எழுபது வயது வரை வானப்ரஸ்த வாழ்க்கை முறை சொல்லப்பட்டு இருக்கிறது.

இந்த வானப்ரஸ்த நிலையை பற்றித்தான் சில கருத்துகளை முன் வைப்பது முக்கியம் என்று நினைக்கிறேன்.  இந்த நவீன உலகமயமாக்குதலின்(Globalization) காரணமாக வானப்ரஸ்த நிலை பெரிதும் மாறி இருக்கிறது.   ஓய்வு பெற்ற பிறகு (Post Retirement) என் தாத்தாவை பார்த்து  இருக்கிறேன். தன்னுடைய முழு நேரத்தையும் கல்வி, ஆராய்ச்சி என்று மூழ்கி இருப்பார்.  அறுபது வயதில் இருந்து தன்னுடைய எண்பதாவது வயது வரை தினமும் 8-10 மணி நேரங்கள் ஏதேனும் புத்தகம் வாசித்து கொண்டு இருப்பர். இதை தவிர ஆன்மிக சர்ச்சை, பூஜை என்று மற்ற நேரங்களில்.  இதை தினமும் செய்வதால் சலிப்பு ஏற்படுவது இயற்கை. அதனால் சிறிது நேரம் கிரிக்கெட், டென்னிஸ், TV  என்று ஈடுபடுத்தி கொள்வது வழக்கம்.  என் தாத்தா மட்டும் இல்லை, நிறைய வீடுகளில் இந்த வயதுக்கு உட்பட்டவர்கள் இப்படித்தான் வாழ்க்கையை நெறிப்படுத்தி கொள்வார்கள்.

இன்றைய கால கட்டங்களில் இந்த வாழ்க்கை முறைதான் மாறிவிட்டது.  சமூக வலைத்தளங்களின் வருகையால் வானப்ரஸ்த நிலை முற்றிலும் மாறி இருக்கிறது.  இன்றைய மாணவர்கள் Smart  Phone  தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்படுவதாக பெரியவர்கள் நினைக்கிறார்கள்.  மாறாக Smart Phone, computers  இல்லாமல் இன்று பள்ளி/கல்லூரி படிப்பை கடக்க முடியாது.   Smart Phone, Social Media  தாக்கத்தினால் ஒரு சில பாதிப்புகள் இருந்தாலும், இவற்றை கடந்து வெற்றிகரமாக இன்றைய மாணவர்களால் செயல்பட முடிகிறது. ஓய்வு பெற்றவர்களுக்கு smart phone, social media தாக்கம் இளைஞர்களை அதிகமாக இருக்கிறது நிதர்சனமாக தெரிகிறது.   பல Facebook, WhatsApp  குழுக்களில் இணைத்துக்கொண்டு தீவிரமாக கருத்து பரிமாற்றங்கள் என்று இவர்களின் வாழ்க்கையில் என்றும் இல்லாத ஒரு சுதந்திரத்தை காண்கிறார்கள்.  தங்களின் ஆரம்ப பள்ளி, மேல்நிலை பள்ளி, கல்லூரி, பல அலுவகங்களில் வேலை, என்று இவர்களின் நட்பு வட்டம் பெரிது.  இதை தவிர Family Groups என்று பலதரப்பட்ட குழுக்களில் இருப்பதால் இவர்களுக்கு கவசிதறல் (distractions) அதிகமாக ஏற்படுகிறது.  தினமும் ஆயிரக்கணக்கில் வரும் வீடியோக்களும், துணுக்கு செய்திகளும் share  செய்யப்படுகிறது.  Technology seems to have completely overwhelmed this age group.  ஆழ்ந்த அறிவும், Deep learning,  ஆன்மீகமும் social media குழுக்களில் photo/video பரிமாற்றத்துடன் முடிந்து விடுகிறது.  ஆன்மிகம், விஞ்ஞானம், வரலாற்று புத்தகங்களில் இருக்கும் ஆழ்ந்த கருத்துக்களை உள்வாங்கும் பொறுமை இல்லையோ என்று தோன்றுகிறது.  மேலும் பல அரசியல்/மதம் என்று சில குழுக்களால் மூளை சலவை செய்யப்பட்டு, தீவிர மத வெறியர்களாகவும் மாற்றி வருகிறது.

இந்த மாறுதல்களால் பின் வரும் சந்ததியினருக்கு தவறான எடுத்துக்காட்டாக மாறிவிடுமோ என்ற அச்சம் இருக்கிறது.  தனி மனித சுதந்திரத்தினால் எனக்கு கேள்வி கேட்கும் உரிமை எனக்கு இல்லாமல் போனாலும், சமூக வலைத்தளங்களால் மூளை சலவை (brainwashing) அதிகமாகிக்கொண்டு இருக்கிறது.  வானப்ரஸ்த வாழ்க்கை முறையில் குடும்ப வாழ்க்கையில் இருந்து பற்று இல்லாத வாழ்க்கையை நோக்கி செல்வதற்கு பதிலாக, உலக பற்று அதிகமாகி விடுகிறாற்போல் இருக்கிறது.

வானப்ரஸ்தத்தை தொடர்ந்து சந்நியாச வாழ்க்கை.  இதில் பெரிதும் நம்மால் சாதிக்க முடிவதில்லை.  மருந்து மாத்திரை, மருத்துவமனை யின் உதவியுடன் தான் நம் சந்நியாச நிலை கழிக்கவேண்டி உள்ளது.  அதனால் நம் வாழ்க்கையை கடைத்தேற வானப்ரஸ்தம் ஒன்றுதான் சிறந்த நேரமாகிறது.  மாற்றம் வரும் என்று நம்புவோமாக.

ரங்கா 

No comments: